பொதுவாக காதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான உணர்வு ஆகும். இருப்பினும் ஒரு தாயின் மீதுள்ள அன்பும், வாழ்க்கை துணையின் மீதுள்ள அன்பும் வேறுபட்டதாகும்.
காதல் என்பது அன்பை குறிக்கும். நம்மை சுற்றியுள்ள அனைத்து உறவுகளின் மீதும் அன்பு இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் காதல் என்று கூறுவதில்லை.
பெரும்பாலும் வயதுக்கு வந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் அன்பையே காதல் என்கிறோம்.
காதலர்கள் தங்களின் காதல் அன்பை வெளிப்படுத்தினால் மட்டுமே அது எதிர் பாலினருக்கு புரியும். அவ்வாறு காதலை வெளிப்படுத்த Love Quotes என்னும் காதல் கவிதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த இடுகையில் உங்களின் காதலை வெளிப்படுத்தவும், அதன் ஆழத்தை உணர்த்தவும் Latest Love Quotes என்ற சிறந்த காதல் கவிதைகளை Tamil மொழியில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Latest Love Quotes in Tamil – காதல் கவிதைகள்

ஒரு கன நேரம் கூட
என் கண்கள்
இமைக்க மறுக்கின்றது
உன்னை
பார்த்துக்கொண்டு
இருக்கையில்
கண்களால்
பேசிக்கொள்ளும்
மௌன மொழிகளை
உன்னிடமிருந்து தான்
கற்றுக்கொண்டேன்
ஒவ்வொரு நொடியும்
என் மனம்
ஏங்குகிறது
உன்னை
காண வேண்டுமென்று
மாதத்திற்கு
ஒருமுறை தான்
பௌர்ணமி வரும்
ஆனால்
எனக்கு
ஒவ்வொரு நாளும்
பௌர்ணமி தான்
நீ
என் அருகில்
இருக்கும்போது
அழகிய
செந்தாமரை மலரும்
நாணம் கொள்ளும்
உன் அழகை கண்டு
புரிதல் இல்லாத
காதல்
காயங்களை தான்
ஏற்படுத்தும்
புரிதலோடு வரும்
காதல் தான்
என்றும்
நிலைத்து நிற்கும்
வாழ்நாள் முழுக்க
சிறையில் இருக்க
விரும்புகிறேன்
உன்
இதயம் என்னும்
சிறையில்
ரோஜா தோட்டத்தில்
இருக்கும்
அனைத்து மலர்களும்
போட்டிபோடும்
உன்
தலை முடியை
அலங்கரிப்பதற்கு
ஒவ்வொரு
நொடியும்
நரகமாக இருக்கும்
நீ
என்னுடன்
பேசாமல்
இருக்கையில்
என்னை
காதல்
என்னும் நோய்
பற்றிக்கொண்டது
உன்னை
கண்டவுடன்
சில நேரங்களில்
என்னையும்
அறியாமல்
தானாக சிரித்துக்கொள்கிறேன்
உன்னை
நினைக்கையில்
என் மனம்
காதலை சொல்ல
ஏங்குகிறது உன்னிடம்
ஆனால்
என் உதடுகளோ
தடுமாறுகிறது
அதை சொல்ல
கண்களை
மூடினால் தான்
கனவுகள் வரும்
ஆனால்
கண்களை மூடாமலேயே
கனவு காண்கிறேன்
உன்னால்
நீல வானத்தை
உருக்கி
கவிதை
எழுதினால் கூட
போதாது
என் காதலை
உன்னிடம்
சொல்வதற்கு
என்னை
மீள முடியாத
சிறை வாசம்
செய்தாய்
உன்
கண்களை கொண்டு
நான் கொள்ளும்
பிடிவாதமும்
தோற்றுப்போகிறது
உன்
உண்மையான
அன்பின் முன்
ஒவ்வொரு வருடமும்
பூக்கள் புதிதாகலாம்
ஆனால்
அதை
கொடுக்கும் வாங்கும்
கைகள்
எப்பொழுதும்
மாறக்கூடாது
நான் என்றும்
சுடர்விட்டு எரியும்
விளக்கே
உந்தன்
அன்பெனும்
எண்ணெய்
இருக்கும் வரை
உன்னை
தினம் தினம்
சந்திக்கும்
ரகசிய அறை
இதயம் என்னும்
சுரங்கம்
சிறிய சிறிய
ஊடல்கள்
காதலை
பிரிப்பதற்கு அல்ல
அது மேலும்
காதலை
வலிமையாக்குகிறது
நான் எப்பொழுதும்
உன் நினைவுகளுடன்
மட்டுமே
பயணிக்கிறேன்
நீ
என்னுடன்
இல்லாதபொழுது
என்னால்
தனித்து
செயல்பட முடியவில்லை
உன் பார்வையால்
என்னை
அபகரித்த பிறகு
வருடத்திற்கு
ஒருமுறை தான்
வசந்த காலம் வரும்
ஆனால்
எனக்கு
ஒவ்வொரு நாளும்
வசந்த காலமே
உன்னை நினைக்கையில்
உன் கண்களுடன்
பேசிப்பேசி
புதிய மொழியையும்
கற்றுக்கொண்டேன்
விழிகள் இரண்டும்
சோகங்களை கொண்டன
உன்னை காணாத வரை
பூந்தோட்டமும்
பேசிக்கொள்கின்றன
உன்னிடம் இருந்து
வரும் வாசம்
எங்கும்
கண்டதில்லையே என்று
மென்மையான
என் இதயமும்
கணம் கொண்ட
இதயமாக
மாறியது
நீ
என்னை விட்டு
விலகிய
பின்பு
ஏனோ
கலங்குகிறது
என்
மனம்
உன்னை விட்டு
பிரிகையில்
நீ பேசுகையில்
உன் குரலில்
இனிமையான
இசையை
உணர்கிறேன்
மழையில்
நனைவதை
தடுக்க
குடையில்
இருக்கும்
நாம் இருவரும்
காதல் மழையில்
நனைகிறோம்
உன்னில்
இருந்து
வரும்
கண்ணீர்
என்
இதயத்தை
துளைத்தெடுக்கிறது
உன்
கால் கொலுசுகளின்
சத்தமும்
கை வளையல்களின்
ஓசையும்
என் காதில்
தேன் போல்
பாய்கிறது
பனியாக
உறைந்து போய்
நிற்கிறேன்
உன்
நாணத்தை
காணும்போது
கரைசேரும்
வாய்ப்பிருந்தும்
கரையேற
விருப்பமில்லை
உன்
நிலவொளியில் இருந்து
நான் எழுதிய
கவிதைகளும்
கண்ணீர் சிந்துகிறது
நீ மௌனமாக
இருக்கையில்
ஆயுள் முழுவதும்
சிறை வாழ்க்கையும்
விரும்புவேன்
அது
உன் இதயமாக
இருந்தால்
நான் எழுதும்
கவிதைக்கு
நீ தான்
உயிரூட்டுகிறாய்
என்
விழிகளால்
உன்
விழிகளை
கண்டேன்
செய்வதறியாது
சிலை போல
நின்றேன்
காலத்தின் நொடிகள்
என்னை
கடந்து செல்லும்போது
என்னை
ரணமாக்கி விட்டு
செல்கிறது
உன்
நினைவுகளால்
எனக்கு
நினைவென்றாலே
அதற்க்கு
நீ தான்
அர்த்தம்
இரவெல்லாம்
கண்கள்
மூட
மறுக்கிறது
உன்னை
காதலித்ததில் இருந்து
உன்னை
கண்டது முதல்
என் முகவரியை
இழந்துவிட்டேன்
ஏனெனில்
என்
நினைவெல்லாம்
நீ
மட்டும் தான்
நிரம்பி இருக்கிறாய்
என்
கால்கள் இரண்டும்
உன்னை
நோக்கியே
நடக்கச்சொல்கிறது
உன்னை
பிரிய
மனமில்லாமல்
கண்ணாடியில்
என் முகத்தை
காணும்போது
அதில்
உன் முகம்
மட்டுமே
தெரிகிறது
உன்னை
எப்போதும்
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்
பகலில் நிஜத்தில்
இரவில் கனவில்
வானத்தில்
பறக்க
சிறகுகள் தேவை
ஆனால்
சிறகுகள் இல்லாமல்
பறப்பேன்
உன்னை
நினைக்கும்போது
வானத்தில் தோன்றும்
அழகிய வானவில்லை
பார்த்திருக்கிறேன்
மகிழ்ச்சியால்
பூத்து குலுங்கும்
மலர்களின்
அழகை பார்த்திருக்கிறேன்
ஆனால்
உன்னை போன்ற
ஒரு பேரழகை
எங்கும் பார்த்ததில்லை
வாழ்க்கையில்
எதை
வேண்டுமானாலும்
இழப்பேன்
ஆனால்
அன்பே
உன்னை மட்டும்
எதற்காகவும்
இழக்க மாட்டேன்
கண்ணோடு
கண் சேர்வது
காதல் என்றால்
தூரத்தில் இருந்தாலும்
நினைவுகளிலே வாழ்வது
அதை விட மேலானது
என் மீது
காதல் தூறல்
விழ
வானில்
வண்ணமயமாய்
காட்சியளிக்கும்
வானவில்லாக மாறியது
என் மனம்
உன்னுடன்
இருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
எனக்கு
மிகப்பெரிய
பொக்கிஷம்
என் நினைவுகளில்
நீச்சலடிக்க தெரியாமல்
மூழ்கிப்போனேன்
உன்
அன்பு என்னும்
கடலில்
நீ தந்த
குளிர்ந்த காபியும்
இதமாகவே
இருந்தது
உன்
அன்பெனும் சூட்டில்
அன்பு என்பதின்
அர்த்தத்தை
உணர்ந்து கொண்டேன்
உன்னுடன்
பழகிய பின்பு
என் வாழ்க்கையை
வாழ ஆரம்பித்தது
உன்னை
பார்த்த
பிறகு தான்
உன் அன்பில்
வாழ்வதற்கு
உன்னை
முதலில்
சந்திக்கும்போது
உன்னிடம் வீழ்ந்தேன்
உன்னுடன்
பழகிய பிறகு
வாழ விரும்புகிறேன்
என்றைக்கும்
நீ
என்னை விட்டு
விலகினாலும்
உன் நினைவுகளுடனே
வாழ்ந்து கொண்டிருப்பேன்
ஏனெனில்
என் காதல்
உண்மை
நீ
சில நேரங்களில்
என் மீது
பொய் கோபம் படுகிறாய்
அதை
நான் ரசிப்பேன்
ஏனெனில்
எனக்கு தான்
தெரியும்
அது கோபம் அல்ல
வெட்கம் தான் என்று
என்னையே
நான்
மறக்கிறேன்
உன்னை
காணும் வேளையில்
குளிரிலும்
நான்
பாதுகாப்பாக
உணர்கிறேன்
உன் பார்வை
என்ற போர்வையில்
உன் பார்வையால்
கைதாக்கி
இதயம் என்னும்
சிறையில்
அடைத்துவிட்டாய்
என்னை
உன் அன்பை
மிஞ்ச
எவரும் இல்லை
எனவே தான்
உன்னை
கெஞ்சி கேட்கிறேன்
காதலி என்று
அன்று
எனக்கு
பேரின்பத்தை
கொடுத்த
உன் நினைவுகள்
இன்று
பெரும் வலிகளை
கொடுக்கின்றன
நீ
பிரிந்து சென்ற பிறகு
அன்று
உனக்காக
எதையும்
செய்வேன்
என்றேன்
ஆனால்
இன்றோ
எதையும்
செய்ய முடியாத
நிலையில்
இருக்கிறேன்
உன் பிரிவை தாங்காமல்
நீ
என்னை வெறுக்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
நரகத்தை உணர்கிறேன்
ஒவ்வொரு முறையும்
காதல் கடிதத்தை
எழுத முயற்சிக்கிறேன்
ஆனால்
வார்த்தைகள்
ஏதும் கிடைக்கவில்லை
என் காதலின்
ஆழத்தை வெளிப்படுத்த
உன்னுடைய
நினைவுகள்
என் இதயத்தில்
ஏன்
யுத்தம் செய்கிறது
என் இதயம்
போர்க்களமா என்ன
காதல்
ஒரு காவியம்
உண்மையாக
காதலிப்பவர்களுக்கே
அதன் இனிமை புரியும்
உன்னை
காதலிக்க
இந்த
ஜென்மம்
ஒன்று
போதாது
கடலில் விழும்
மழைத்துளி
போல
உன்
அன்பெனும் கடலில்
கலந்துவிட்டேன்
உன்னை
தழுவிச்செல்லும்
தென்றலானது
உன் நினைவுகளையும்
சேர்த்து
கொண்டு செல்கிறது
அந்த தென்றலையும்
சிறை பிடித்துள்ளேன்
உன் நினைவுகள்
என்னோடே இருக்க
வேண்டுமென்று
உன்னை
கண்ட பிறகே
வாழ்க்கை
எவ்வளவு இனிமையானது
என்று உணர்ந்தேன்
பறவைகளுக்கு
இறக்கை இருப்பது
பறக்கத்தான்
அதுபோல
நான் இருப்பது
உன் அன்பெனும்
காதலில் மிதக்கத்தான்
இதுவரை
ரசிக்க தெரியாத
எனக்கு
இப்பொழுது
எதை கண்டாலும்
ரசிக்க தோன்றுகிறது
உன் நினைவுகளால்
தென்றலாக
என் மனதுக்குள்ளே
நுழையும்
சில நினைவவுகள்
வெளியேறும்போது
என் மனதை
போர்க்களமாக்கி செல்கின்றன
நீ
என்னை
கடந்து செல்லும்போதெல்லாம்
என் விழிகள்
இரண்டும்
உன்னை நோக்கியே
திரும்புகிறது
உன்னிடம்
காதலை வெளிப்படுத்த
நெருங்கும் நேரத்தில்
தோன்றும் ஆனந்தம்
உன்னை நெருங்கியதும்
மொழிகள் அனைத்தையும்
மறக்கின்றேன்
பிறகு எப்படி
சொல்வது
என் காதலை
காதலிக்க
கற்றுக்கொண்ட
இதயத்திற்கு
அதிலிருந்து
மீள
வழி தெரிவதில்லை
கண்கள் இரண்டும்
உறைந்துபோனது
உன்னை
கண்டவுடன்
உன்
அன்பெனும்
மாளிகையில்
வாழ்நாள் முழுவதும்
வசிக்க ஆசை
விலகாத
கவலைகளும்
பறந்து சென்றுவிடும்
உன் மடியினில்
தலை வைத்தபிறகு
கண்கள் கலங்கியது
இதழ்கள் மௌனமானது
இதயம் கனத்தது
நீ
என்னைவிட்டு
பிரிகையில்
காதலிக்கும்போது
தெரிவதில்லை
பிரிவின் வேதனை
பிரியும்போது
நினைப்போம்
ஏன் தான்
காதலித்தோம் என்று
காதலிக்கும்போது
கிடைக்கும் இன்பம்
சொர்கத்தை விட
மேலானது
பிரித்தலின்போது
கிடைக்கும் துன்பம்
நரகத்தையும் விட
கொடியது
காதலை விட
இன்பம் கொடுப்பது
ஏதுமில்லை
அதே நேரத்தில்
காதலை விட
துன்பம் கொடுப்பதும்
ஏதுமில்லை
கண்கள் மூடினால்
கனவில்
நீ தான்
கண்கள் திறந்தால்
காணும் இடமெல்லாம்
நீ தான்
என்ன மாயம்
செய்தாயோ
காதல்
சிறகுகளை முளைத்து
பறக்க வைக்கும்
அதே காதல்
சிறகுகளை கத்தரித்து
அதல பாதாளத்தில்
கொண்டு செல்லும்
காதலிக்கும்போது
மிகவும்
ஆழமாக போகாதே
பின்பு
அதிலிருந்து
மீண்டு வருவது
கடினம்
ஆயுள்கள்
பல வேண்டும்
உன்னை
நேசிப்பதற்கு
என்
ஒவ்வொரு
சுவாசமும்
உன்னை
நேசிக்கிறது
ஏனெனில்
என் சுவாசமே
நீ தான்
செல்பேசியை
எடுத்ததும்
உங்களுக்கு
யார்
நினைவுக்கு வருகிறார்களோ
அவர்களை
ஒருபோதும்
இழந்து விடாதீர்கள்
உன்னை
வர்ணிக்கும்போது
கவிதையும் வெட்கப்படுகிறது
வர்ணனைகளை
கண்டு
ஒருவரின் மீது
பொய்யான
அன்பை காட்டி
அதை
அவர்களை
நம்ப வைப்பது தான்
பெரிய துரோகம்
என்னுடைய
ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
உன் மீது
உண்மையான
அன்பை
வைத்ததற்கான
வெகுமதியா?
நீ
என் உயிரோடு
கலந்திருக்கும்போது
உன்னை
எப்படி
மறக்க முடியும்
என்னால்?
என் கைபேசியை
எடுக்கும்போது
உன்னிடமிருந்து
எப்பொழுது
மெசேஜ் வரும்
என்று
ஒவ்வொரு நிமிடமும்
ஏங்குகிறது
என் மனம்
உனக்கும் எனக்குமான
பயணம்
இந்த ஜென்மத்தில்
மட்டும் இல்லை
அடுத்த ஜென்மத்திலும்
தொடரும்
என்று சொல்லிவிடு
விதிக்கு
நம்மை
அளவில்லாமல்
அழவைக்க முடியும்
என்றால்
அது
நாம் அளவில்லாமல்
அன்பு வைக்கும்
ஒருவரால் மட்டுமே
முடியும்
மனம்
முடிக்கும் வரை
மட்டுமே
நேசிப்பது
காதல் அல்ல
உயிர்
பிரியும் வரை
நேசிப்பது தான்
உண்மையான காதல்
ஒவ்வொரு நாளும்
உன்னிடம் பேச
வாய்ப்பு கிடைக்காதோ
என்ற ஏக்கம்
அப்படி
வாய்ப்பு கிடைத்தாலும்
உன்னிடம் பேச
ஒரு தயக்கம்
காலங்கள் மாறலாம்
வாழ்க்கை மாறலாம்
ஆனால்
உன் நினைவுகள்
என்றும் மாறாது
நான்
பிறக்கும் போது
இவ்வுலகை கண்டேன்
உன்னை
முதன்முதலில்
கண்டபோது
இவ்வுலகையே மறந்தேன்
உன்னுடன்
இருந்த காலங்களில்
வானத்தில் பறப்பது போல
உணர்ந்தேன்
நீ என்னுடன் இல்லாத
இந்த நேரத்தில்
பாதாளத்தில்
தூக்கி வீசப்பட்டேன்
குயிலினும் இனிய
உன் குரலை கேட்க
என்னுடைய செவிகள்
காத்துக்கிடக்கின்றது
உன் குரலிசையை
தொடங்குவாயாக
ஒரு பருகு
அன்னமும் இறங்கவில்லை
என்னுள்
ஏனெனில்
என்னுள் முழுக்க
நீ நிறைந்துள்ளாய்
உன் மீதுள்ள
காதல் உணர்வை
வெளிப்படுத்த
மொழிகள் ஏதும்
போதவில்லை எனக்கு
என்னுடைய கண்கள்
இமைக்க மறுக்கின்றது
உன்னை
பார்த்துக்கொண்டிருக்கும் போது
உனக்காக
எதையும் இழப்பேன்
ஆனால்
உன்னை எதற்காகவும்
இழக்க மாட்டேன்
உன்னுள் நான்
என்னுள் நீ
நம் இருவருக்கும்
தனி உலகம்
என்னுள்
காதல் கவிதைகள் தோன்றுகிறது
உன்னை நினைக்கும்போது
மொழியையே மறக்கின்றேன்
நீ என்னை விட்டு விலகும்போது
இந்த அண்டத்தையே
வலம் வரவேண்டும் என்ற ஆசை
உன்னுடன்
பயணம் செய்யும்போது
கவலைகள்
எனக்கு எப்போதும் இல்லை
உன் அன்பு
இருக்கும் வரையில்
கவிதைகளால் பேசும்
வார்த்தைகளை விட
கண்களால் பேசும்
மௌனமே சிறந்தது
உன் அன்பெனும் சிறைக்குள்
என்னை அடைத்துவிட்டாய்
அதில் நான்
ஆயுள் கைதியாக
இருக்க இருக்க விரும்புகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் பேசும்போது
நீ மௌனத்தை மட்டுமே
பதிலாக அளிக்கிறாய்
ஆனால்
என் மனம் துடிக்கிறது
உன் பதிலை எதிர்ப்பார்த்து
என் கண்கள் இரண்டும்
உன்னையே தேடுகிறது
ஆனால் அதற்க்கு தெரியாது
நீ என் இதயத்தில்
வாசம் செய்கிறாய் என்று
பூக்களும் ஏங்குகிறது உன்னை காண
ஏனெனில் அந்த பூக்களுக்கெல்லாம்
ராணி நீ தானே
என் காதலை
விழிகள் மூலம் வெளிப்படுத்தினேன்
கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினேன்
ஆனால் அது போதவில்லை எனக்கு
ஏனெனில் என் முழு காதலை சொல்ல
வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை
உங்களின் மனதிற்கு பிடித்த பல Latest Love Quotes யை மேலே படித்து இருப்பீர்கள். மேலும் இந்த பதிவில் அவ்வப்போது புதிய காதல் கவிதைகள் சேர்க்கப்படும். இதை பற்றிய உங்களின் கருத்துகளை கீழே பதிவிடவும்.