இந்த பதிவில் சிறந்த புத்தக வாசிப்பு கவிதைகளை (Books Quotes) உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன். இந்த கவிதைகளை வாசிப்பதன் மூலம் புத்தகங்களின் அருமைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்.
சிறந்த புத்தகங்களின் பயன்களை பற்றி சில வரிகளில் சொல்லிவிட முடியாது. அது மனிதர்களுக்கு எண்ணற்ற பயன்களை வாரி வழங்குகிறது. ஒரு நல்ல புத்தகம் ஆனது வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும்.
ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி புத்தகங்களுக்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரிடமும் கேட்டால், நிச்சயமாக அவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உண்டு என்றே கூறுவார்கள்.
நீங்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அது மன அமைதியையும், தெளிவையும் கொடுக்கிறது. உங்களின் அறிவை மேலும் மேலும் வளர்த்துகொண்டே இருக்கும். உங்களை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் ஒளியாய் புத்தகங்கள் விளங்குகிறது.
நீங்கள் புத்தக வாசிப்பை தொடங்க விரும்புகிறீர்களா? நிச்சயம் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். புத்தகங்களை பற்றிய பொன்மொழிகள், கவிதைகளை தெரிந்துகொள்வதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
Best Books Quotes யை Tamil மொழியில் உங்களுக்கு வழங்குகிறேன்.
Best Books Quotes in Tamil
புத்தகங்கள்
வெறும் காகிதங்கள் அல்ல
அவை
உன் வாழ்க்கையை மாற்றும்
தந்திரங்கள்
அறியாமை என்ற இருட்டில் இருந்து
அறிவு என்ற வெளிச்சத்திற்கு
கொண்டு வரும்
வழிகாட்டியே புத்தகங்கள்
புத்தகங்களில் இருப்பது
வெறும் எழுத்துக்கள் அல்ல
வாழ்விற்கான
அற்புத பொக்கிஷம்
புத்தக வாசனையை
விரும்புபவனே
சான்றோர் போற்றும்
மனிதனாகிறான்
ஒருவனை
எந்த காலத்திற்கும்
கொண்டு செல்லும் வலிமை
புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு
நல்ல புத்தகங்களை
திருப்பும்போது
பல காலங்கள்
முன்னோக்கி செல்கிறான்
நூலகத்திற்கு செல்லும்
மனிதனால் மட்டுமே
சொர்கத்திற்கு செல்லும்
வழியை கண்டறிய முடியும்
வழிப்பாட்டு தலங்களுக்கு
செல்வதை காட்டிலும்
புத்தக களஞ்சியங்களுக்கு செல்வதே
ஞானத்தை பெறுவதற்கான வழி
ஒரு நல்ல நண்பனாக
புத்தகங்களை தவிர
வேறு யாரும்
இருக்க முடியாது
புத்தகங்களை வாசிக்க
உன் தலை குனியும் போது
உன் வாழ்க்கை
மேல் நோக்கி உயரும்
புத்தகத்தை வாசிக்க தெரியாத ஒருவனுக்கும்
வாசிக்க தெரிந்தாலும் வாசிக்காத ஒருவனுக்கும்
வித்தியாசம் ஏதும் இல்லை
நீ புத்தகங்களை புரட்டினால்
அது உன் வாழ்க்கையையே
புரட்டி போடும்
புத்தகங்களில்
பலர் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறார்கள்
அதை படிக்கும் போது தான்
உன்னால் உணர முடியும்
ஒருவன் புத்தகத்தின் மீது
கொண்ட காதலானது
வெற்றி என்னும் தேரின் மீது
வலம் வர வைக்கும்
ஒருவன் படிக்கும்
புத்தகங்களை கொண்டு
அவனின் எண்ணங்களை
தெரிந்துகொள்ளலாம்
எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளையும்
வார்த்தைகளை கொண்ட பக்கங்களையும்
பக்கங்களை கொண்ட தொகுப்பையும்
கொண்டது தான் புத்தகம்
இலக்கியங்களும், வரலாறுகளும்,
போராட்டங்களும், அனுபவங்களும்,
புதுமைகளும், செழுமைகளும்
அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கும்
புனித இடமே புத்தகம்
மேற்கண்ட புத்தக வாசிப்பு கவிதைகள் உங்களுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். இன்றே உங்களின் புத்தக வாசிப்பை தொடங்கி அதன் பலனை பெறுங்கள்.